இந்தியா

இந்திய கச்சா எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் மூலம் தாக்குதல்- நடுக்கடலில் பரபரப்பு

Published On 2023-12-23 11:53 GMT   |   Update On 2023-12-23 11:53 GMT
  • கப்பலில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
  • எம்.வி.செம் புளூட்டோ கச்சா எண்ணெய் கப்பலை நோக்கி போர்க்கப்பலும் அனுப்பப்பட்டுள்ளது.

சவுதியில் இருந்து மங்களூர் நோக்கி வந்த இந்திய கச்சா எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடந்துள்ளது. கப்பலில் இருப்பவர்களை மீட்க கடலோர காவல் படையின் விக்ரம் கப்பல் விரைந்துள்ளது.

கச்சா எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

கப்பலில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் கப்பலை நோக்கி போர்க்கப்பலும் அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தகவல் வெளியாகியுள்ளது.

எம்.வி.செம் புளூட்டோ கச்சா எண்ணெய் கப்பலை நோக்கி போர்க்கப்பலும் அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News