இந்தியா

கள்ளக்காதலில் கர்ப்பம்: கணவன், 2 குழந்தைகளுடன் வாழ விரும்பிய பெண்- காதலன் எடுத்த கொடூர முடிவால் பறிபோன இரண்டு உயிர்

Published On 2025-10-19 18:30 IST   |   Update On 2025-10-19 18:30:00 IST
  • கணவனை விட்டு கள்ளக்காதலுடன் சில காலம் தங்கியபோது கர்ப்பம்.
  • வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு தந்தையாக கள்ளக்காதலன் விரும்பியதால் ஏற்பட்ட விபரீதம்.

கள்ளக்காதலில் கர்ப்பம்: கணவன், 2 குழந்தைகளுடன் வாழ விரும்பிய பெண்- கள்ளக்காதலன் எடுத்த விபரீத முடிவு/ An Extramarital Affair Pregnancy Then Double Murder In Delhi

டெல்லியில் கள்ளக்காதலியின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு சொந்தம் கொண்டாடி, கள்ளக்காதலன் விபரீத முடிவு எடுத்ததால் இருவருடைய உயிரும் பறிபோனது.

மத்திய டெல்லியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 23). இவரது மனைவி ஷாலினி (22). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. ஷாலினி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

கொஞ்சம் நாட்களுக்கு முன்னதாக ஷாலினுகும் ஆஷு என்ற சைலேந்திரா (வயது 34) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது, ஆஷு உள்ளூர் கிரிமினல் எனத் தெரிகிறது.

கள்ளக்காதலால் ஷாலினி கர்ப்பம் அடைந்துள்ளார். ஷாலினி வயிற்றில் உள்ள குழந்தைக்கு தான் தந்தையாக போகிறோம் என ஆஷு சந்தோசம் அடைந்துள்ளார். அந்த நிலையில்தான் ஷாலினியும், ஆகாஷும் சமரசம் அடைந்து இரண்டு குழந்தைகளுடன் மீண்டும் ஒன்றிணைந்து வாழ முடிவு செய்துள்ளனர்.

தன்னை விட்டு ஷாலினி பிரிந்து செல்ல முடிவு செய்ததால் கள்ளக்காதலி மற்றும் அவரது கணவனை தீர்த்துக்கட்ட ஆஷு முடிவு செய்துள்ளார்.

நேற்றிரவு ஷாலின் தனது கணவன் இ-ரிக்ஷாவில் தாயாரை பார்க்க சென்றுள்ளார். இ-ரிக்ஷாவில இருவரையும் பார்த்த ஆஷு கத்தியால், கணவனை குத்த முயன்றுள்ளார். அப்போது, ஷாலின் கணவர் சுதாரித்து தடுக்க முயன்றுள்ளார். இதனால அவர் மீது கத்தி குத்து விழுந்துள்ளது. இருந்தாலும் பெரிய காயமின்றி தப்பிவிட்டார்.

உடனே, ரிக்ஷாவில் இருந்து ஷாலியை கத்தியால் பலமுறை குத்தியுள்ளார். இதில் ஷாலினி ரத்த வெள்ளத்தில் மயக்கமானார். அப்போது ஆகாஷ் தனது மனைவியை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆஷு அவரை வெறிக்கொண்டு தாக்க முயன்றுள்ளார். ஆனால், ஆகாஷ் நேர்த்திய தடுத்து கத்தியை அவரிடம் இருந்து பறித்துள்ளார். அத்துடன் ஆஷுவை சரமரியாக குத்தியுள்ளார். இதில் ஆஷுவும் படுகாயம் அடைந்துள்ளார்.

பின்னர் மூன்று பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஷாலினி மற்றும் அவரது கள்ளக்காதலன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆகாஷ் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சமப்வம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News