இந்தியா

இந்திய பெருங்கடலில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Published On 2024-01-21 03:03 GMT   |   Update On 2024-01-21 04:57 GMT
  • இந்திய பெருங்கடலின் தென்மேற்கில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • இது 6.4 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது.

புதுடெல்லி:

இந்திய பெருங்கடலில் தென்மேற்கு பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட் டது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது. நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது.

இதேபோல், பிரேசில் நாட்டின் மேற்கு பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 592 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

Tags:    

Similar News