இந்தியா

அந்தமான் கடல் பகுதியில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Published On 2023-10-08 02:12 GMT   |   Update On 2023-10-08 02:12 GMT
  • அந்தமான் கடல் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது.

போர்ட்பிளேர்:

அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே அந்தமான் கடல் பகுதியில் இன்று அதிகாலை 3.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

Tags:    

Similar News