இந்தியா

அந்தமான் நிக்கோபார் தீவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

Published On 2023-08-11 00:09 GMT   |   Update On 2023-08-11 00:09 GMT
  • அந்தமான் நிக்கோபார் தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
  • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகாலை 2.56 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், நிலநடுக்கத்தின் ஆழம் 10 கி.மீட்டர் என்றும் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Tags:    

Similar News