இந்தியா
2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.ஏ. கிளைகளை அமைக்க முடிவு - உள்துறை மந்திரி அமித்ஷா
- அரியானாவில் நடந்த நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார்.
- அப்போது பேசிய அவர் 2019-ம் ஆண்டுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீருக்கு ரூ.57,000 கோடி முதலீடு வந்துள்ளது என்றார்.
சண்டிகர்:
அரியானா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
வரும் 2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.ஏ. கிளைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எல்லை தாண்டிய குற்றங்களைத் திறம்பட கையாளுவது மத்திய, மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்பு ஆகும்.
2019-ம் ஆண்டுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீருக்கு ரூ.57,000 கோடி முதலீடு வந்துள்ளது.
இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் அரசுசாரா நிறுவனங்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்
என தெரிவித்தார்.