இந்தியா

அமேதி குடும்பம் போன்றது: இந்த பிணைப்பு ஒருபோதும் உடையாது- ஸ்மிருதி இரானி

Published On 2025-05-26 21:15 IST   |   Update On 2025-05-27 08:46:00 IST
  • எனக்கு அமேதியுடன் பழைய தொடர்பு இருக்கிறது. இது ஒரு குடும்ப உறவு. ரத்த உறவு.
  • அத்தகைய உறவுகள் ஒருபோதும் பலவீனமாகாது ஒருபோதும் முறிவதில்லை.

மத்திய முன்னாள் அமைச்சரும், அமேதி தொகுதி முன்னாள் எம்.பி.யுமான ஸ்மிருதி இரானி, ஒரு கருத்தரங்கில் பங்கேற்பதற்காக அமேதி சென்றிருந்தார்.

அப்போது ஸ்மிருதி இரானி கூறியதாவது:-

எனக்கு அமேதியுடன் பழைய தொடர்பு இருக்கிறது. இது ஒரு குடும்ப உறவு. ரத்த உறவு. அத்தகைய உறவுகள் ஒருபோதும் பலவீனமாகாது ஒருபோதும் முறிவதில்லை. அமேதி என்னை ஒரு சகோதரியாக ஏற்றுக்கொண்டது. ஒரு சகோதரிக்கும் அவளுடைய வீட்டிற்கும் உள்ள பிணைப்பு அவளுடைய இறுதிச் சடங்கோடுதான் முடிவடையும். நீங்கள் அனைவரும் என்னுடன் கட்டியெழுப்பிய உறவு முறிந்து போக அனுமதிக்கப்படாது.

2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு அமைக்கப்பட்டபோது, கிராமப்புற மேம்பாட்டிற்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்தது.

2014-க்கு முன்பு, பஞ்சாயத்து மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் ரூ.70,000 கோடியாக இருந்தது. இது ரூ.2.5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டது. இதன் விளைவாக, இந்தியா இன்று வலுவாக இருப்பது மட்டுமல்லாமல், நமது பொருளாதாரம் இப்போது உலகில் நான்காவது இடத்தில் உள்ளது.

இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறினார்.

2019 மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு ராகுல் காந்தியை தோற்கடித்தார். 2024 தேர்தலில் கிஷோரி லால் சர்மா ஸ்மிருதி இரானி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

Tags:    

Similar News