இந்தியா

ராமாயண நாடகத்தில் மேடையிலேயே பன்றியை கொன்று பச்சை இறைச்சியை சாப்பிட்ட நடிகர் கைது

Published On 2024-12-03 12:11 IST   |   Update On 2024-12-03 12:11:00 IST
  • ராமாயண நாடகத்தில் பேய் வேடத்தில் நடித்த நடிகர் பன்றியின் வயிற்றை கத்தியால் கிழித்து அதன் இறைச்சியை சாப்பிட்டுள்ளார்.
  • இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ரலாப் பகுதியில் கடந்த 24-ந்தேதி ராமாயண நாடக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அப்போது பேய் வேடத்தில் நடித்த 45 வயது நாடக நடிகர் மேடையில் உயிருடன் இருக்கும் பன்றியின் வயிற்றை கத்தியால் கிழித்து அதன் இறைச்சியை சாப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று ஒடிசா மாநில சட்டசபை கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆளும் பா.ஜ.க. உறுப்பினர்கள் பாபுசிங் மற்றும் ஜனாதன் பிஜுலி ஆகியோர் பேசினர்.

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நடிகர் மற்றும் நாடக அமைப்பாளர்களில் ஒருவரான பின்பதர் கவுடா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது விலங்குகளை கொடுமைப்படுத்துதல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை மீறிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News