இந்தியா
திருவனந்தபுரத்தில் பரபரப்பு - மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
- கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
- நேற்றிரவு வந்த மர்ம நபர்கள் இந்த அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் ஒரு பைக்கில் வந்து இந்த அலுவலகத்தினுள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
கட்சி அலுவலகத்தில் வெடிகுண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.