இந்தியா
ஜம்மு- காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள்
- கிஷ்த்வார் மாவட்டத்தில் இன்று மாலை 4.18 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கத்தால் உயிர்சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் ஏதும் இல்லை.
லடாக்கில் இன்று மாலை 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, 15 நிமிடங்கள் இடைவௌியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே நேரத்தில் ஜம்மு- காஷ்மீரின் கிஷ்த்வாரில் இன்று லேசான தீவிர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
தேசிய நிலநடுக்கவியல் மையம் கூற்றுபடி, இன்று மாலை 3.48 மணிக்கு 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மாலை 4.01 மணியளவில் 4.8 மற்றும் 3.8 தீவிரம் கொண்ட இரண்டு நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில், கிஷ்த்வார் மாவட்டத்தில் இன்று மாலை 4.18 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் ஏதும் இல்லை.