இந்தியா

கடந்த 3 ஆண்டில் 274 யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளன - மத்திய அரசு தகவல்

Published On 2023-03-20 20:16 GMT   |   Update On 2023-03-20 20:16 GMT
  • இந்தியாவில் மொத்தம் 29 ஆயிரத்து 964 யானைகள் உள்ளன.
  • 2019 முதல் 2022க்கு இடைப்பட்ட காலத்தில் 274 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.

புதுடெல்லி:

மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வனத்துறை மந்திரி அஸ்வினி குமார் சௌபே கூறியதாவது:

இந்தியாவில் மொத்தம் 29 ஆயிரத்து 964 யானைகள் உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மொத்தம் 2 ஆயிரத்து 761 யானைகள் உள்ளன.

கடந்த 2019 முதல் 2022க்கு இடைப்பட்ட காலத்தில் மனிதர்களால் மொத்தம் 274 யானைகள் கொல்லப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

Tags:    

Similar News