இந்தியா
மேற்கு வங்க ஸ்டீல் ஆலை

மேற்கு வங்க ஸ்டீல் ஆலையில் தீ விபத்து: 3 தொழிலாளர்கள் பலி- 44 பேர் படுகாயம்

Published On 2022-02-18 13:18 GMT   |   Update On 2022-02-18 13:18 GMT
தீ விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்து, மேற்சிகிச்சைக்காக ஹால்டியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கம் துர்காபூரில் பெரிய ஸ்டீல் ஆலை உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணிப்புரிந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மதியம் 2 மணியளவில் மோட்டார் ஸ்பிரிட் தர பிரிவில் தொழிலாளர்கள் வேலை செய்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆக்சிஜன் வேக்யூம் யூனிட்டில் இருந்து திடீரென தீ பிடித்தது. இதில் சிக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 44 பேர் படுகாயம் அடைந்தனர்.

சம்பவ இடத்தில் தீயை உடனடியாக அணைக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும், காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்து, மேற்சிகிச்சைக்காக ஹால்டியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆபத்தான நிலையில் உள்ள தொழிலாளர்களை உயர் மருத்துவ மேலாண்மை நிறுவனங்களுக்கு மாற்றுவதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் கோரப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்.. போலீசார் மீது 5 நாய்களை ஏவி விரட்டியடித்த வாலிபர் - தப்பியோடியவரை பிடிக்க நண்பர்கள் 4 பேர் கைது
Tags:    

Similar News