செய்திகள்
150 நாடுகளுக்கு அதிகமாக உயிர் காக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்துள்ளோம் - பிரதமர் மோடி
தற்போதைய ஆண்டில் 6.5 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை நாம் ஏற்றுமதி செய்துள்ளோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியே மருந்து பிரிவில் முதல் சர்வதேச கண்டுபிடிப்புக்கான மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஒட்டுமொத்த மனித இனத்தின் நலனில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். உலக அளவில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த எண்ணங்களை ஒட்டுமொத்த உலகிற்கும் நாம் காட்டியுள்ளோம்.
உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை 150-க்கும் அதிகமான நாடுகளுக்கு நாம் ஏற்றுமதி செய்துள்ளோம்.
இதேபோல், இந்த ஆண்டில் 100 நாடுகள் வரை 6.5 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை ஏற்றுமதி செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் கொட்டித்தீர்த்த மழை