செய்திகள்

வெளியுறவு துறை அமைச்சரானார் ஜெய்சங்கர்

Published On 2019-05-31 07:52 GMT   |   Update On 2019-05-31 07:52 GMT
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஜெய்சங்கருக்கு வெளியுறவு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இரண்டாவது முறையாக நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் பல்வேறு எம்.பி.க்கள் அமைச்சரவையில் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், மத்திய அமைச்சர்களுக்கான துறைகளின் விவரம் வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு:

ஜெய்சங்கர் - வெளியுறவுத்துறை 
பியூஷ் கோயல் - ரயில்வே துறை
சதானந்த கவுடா - ரசாயனம், உரத்துறை
நிதின் கட்கரி - சாலை போக்குவரத்து துறை
ஸ்மிருதி இரானி - மகளிர் நலத்துறை



ரவிசங்கர் பிரசாத் - சட்டத்துறை, தகவல், மின்னணு தொழிற்துறை
பிரகாஷ் ஜவ்டேகர்- சுற்றுச்சூழல், வனம், தகவல் ஒலிபரப்பு
டாக்டர் ஹர்ஷ்வர்தன் - சுகாதாரத்துறை
நரேந்திர சிங் தோமர் - விவசாய துறை அமைச்சர்
முக்தார் அபாஸ் நக்வி - சிறுபான்மையினர் நலத்துறை

இத்துடன், மத்திய இணை மந்திரிகளுக்கான துறைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
Tags:    

Similar News