செய்திகள்
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி - நாளை குஜராத் சென்று தாயிடம் ஆசிபெறுகிறார் பிரதமர் மோடி
பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, பிரதமர் மோடி நாளை குஜராத் சென்று தனது தாயிடம் ஆசிபெறுகிறார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. பாஜக போட்டியிட்ட 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, பிரதமர் மோடி நாளை குஜராத் சென்று தனது தாயிடம் ஆசிபெறுகிறார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நாளை குஜராத் மாநிலம் செல்கிறேன். அங்கு எனது தாயை சந்தித்து அவரது ஆசியை பெறுகிறேன். மேலும் நாளை மறுதினம் வாரணாசி தொகுதிக்கு சென்று எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.