செய்திகள்
7-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல் - பகல் ஒரு மணிவரை 39.85 சதவீதம் வாக்குப்பதிவு
8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று ஏழாம் கட்டமாக நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் பகல் ஒரு மணி நிலவரப்படி 39.85 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவைவில் உள்ள 543 தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.
அதைதொடர்ந்து, ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி ஆறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. எட்டு மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
பகல் ஒரு மணி நிலவரப்படி மாநிலவாரியாக பதிவான வாக்கு சதவீதம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
8 மாநிலங்களையும் ஒப்பிடுகையில் அதிகபடசமாக ஜார்கண்ட் மாநிலத்தில் 52.89 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
மேற்கு வங்காளம் மாநிலத்தில் 47.55 சதவீதம் வாக்குகளும், மத்தியப்பிரதேசத்தில் 43.89 சதவீதம் வாக்குகளும், பஞ்சாப்பில் 36.66 சதவீதம் வாக்குகளும், உத்தரப்பிரதேசத்தில் 36.37 சதவீதம் வாக்குகளும், பீகாரில் 36.20 சதவீதம் வாக்குகளும், சண்டிகரில் 35.60 சதவீதம் வாக்குகளும், இமாச்சலப்பிரதேசத்தில் 34.47 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.
ஒட்டுமொத்தமாக மேற்கண்ட 59 தொகுதிகளிலும் ஒரு மணிவரை 39.85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.