செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் அன்பு வெற்றி பெறும் - ராகுல் காந்தி பேட்டி

Published On 2019-05-12 06:28 GMT   |   Update On 2019-05-12 06:28 GMT
தலைநகர் டெல்லியில் அவுரங்கசீப் லேனில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த தேர்தலில் அன்பு வெற்றி பெறும் என தெரிவித்தார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்டமாக இன்று 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.

இந்த தேர்தலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்பட முக்கிய பிரமுகர்கள் காலையில் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தலில் டெல்லியின் அவுரங்கசீப் லேனில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வாக்கை பதிவுசெய்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பண மதிப்பிழப்பு, விவசாயிகள் பிரச்சனை, கப்பார் சிங் வரி (ஜி.எஸ்.டி.) மற்றும் ரபேல் ஊழல் என இந்த தேர்தலில் பல முக்கிய விவகாரங்கள் உள்ளன. தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி வெறுப்புணர்வை வெளிப்படுத்தினார். நாங்கள் அன்பை பயன்படுத்தினோம். இந்த மக்களவை தேர்தலில் அன்பு வெற்றி பெறும் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News