செய்திகள்

ஆந்திராவில் சோகம்: தனியார் பேருந்து - ஜீப் மோதிய விபத்தில் 14 பேர் பலி

Published On 2019-05-11 15:21 GMT   |   Update On 2019-05-11 15:35 GMT
ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் தனியார் பேருந்தும், ஜீப்பும் மோதிய விபத்தில் 14 பேர் பரிதாபமாக பலியாகினர்.
அமராவதி:

ஆந்திரப்பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள வேல்துருத்தி என்ற பகுதியில் தனியார் பேருந்தும் ஜீப்பும் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மீட்புப்பணிகளின் போது அப்பகுதி மக்கள் திரண்டு உதவு செய்தனர்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் தெலுங்கானா மாவட்டத்தில் நடைபெற்ற திருமணத்துக்கு சென்று திரும்பி வந்தவர்கள் என தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News