செய்திகள்

மாணவி மீது பாலியல் வன்கொடுமை - வாலிபர் கைது

Published On 2019-05-11 15:57 IST   |   Update On 2019-05-11 15:57:00 IST
கர்நாடகத்தில் கல்லூரி மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தும்கூரு:

கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டம், குனிகல் வட்டம், மாதகோனஹள்ளியை சேர்ந்தவர் கவுசிக் (வயது26), இவர் தனது கிராமத்தின் அருகே உள்ள சிகேபாளையாவைச் சேர்ந்த பி.யூ.சி. 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவியை கடத்தி சென்று பெங்களூருவில் உள்ள தனது நண்பரின் அறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ஹூலியூர்துர்கா போலீசார் கவுசிக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News