செய்திகள்

சமாஜ்வாடி கட்சி தலைவர் அசம் கான் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் மீண்டும் தடை

Published On 2019-04-30 15:23 GMT   |   Update On 2019-04-30 15:23 GMT
சமாஜ்வாடி கட்சி தலைவர் அசம் கான் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் இன்று மீண்டும் தடை விதித்துள்ளது. #LokSabhaElections2019 #EC #AzamKhan
புதுடெல்லி:

உத்தரப்பிரதேசம் மாநிலம் ராம்பூர் பாராளுமன்ற தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் அசம் கான் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் ஜெயப்பிரதா போட்டியிடுகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய சமாஜ்வாடி வேட்பாளர் அசம் கான், ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு பாஜக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் அசம் கான் 72 மணி நேரத்துக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.



இந்நிலையில், தேர்தல் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளால் பேசியதாகவும், இனவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் கூறி சமாஜ்வாடி வேட்பாளரான அசம் கான், நாளை காலை 6 மணியில் இருந்து 48 மணி நேரத்துக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதித்து தேர்தல் ஆணையம் இன்று மீண்டும் உத்தரவிட்டது.

சமாஜ்வாடி வேட்பாளர் அசம் கான் மீது இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #EC #AzamKhan
Tags:    

Similar News