செய்திகள்

உத்தரபிரதேசத்தில் இனி பாகுபலிகளுக்கு இடமில்லை - அமித் ஷா காட்டம்

Published On 2019-04-29 09:50 GMT   |   Update On 2019-04-29 09:50 GMT
உத்தரபிரதேசம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, உத்தரபிரதேசத்தில் இனி பாகுபலிகளுக்கு இடமில்லை என கூறியுள்ளார். #AmitShah #LSElections2019
லக்னோ:

உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல், 3 கட்டங்களாக முடிவடந்த நிலையில், இன்று 4வது கட்டமாக நடைபெற்று வருகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இதையடுத்து காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சித்ராகூட்டில் நடைபெற்ற பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

உத்தரபிரதேசம் மாநிலம் எந்த அளவிற்கு மாற்றம் கண்டுள்ளது என்பதை மெகா கூட்டணியால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. பாகுபலிகளுக்கு அவர்கள் சீட் கொடுத்துள்ளனர்.  தற்போது உத்தரபிரதேசத்தில் யோகியின் தலைமையில் நடைபெறும் ஆட்சியில், எந்த பாகுபலிகளுக்கும் இடமில்லை. ஏனென்றால், பாஜக அரசு அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.



மெகா கூட்டணியின் தலைவர் ராகுல் காந்தி தான். நாட்டில் வெப்பம் கொஞ்சம் அதிகரித்தால் விடுப்பு எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறார். அவரது தாய் கூட ராகுல் எங்கு இருக்கிறார் என கண்டறிய இயலவில்லை.  நிரந்தரமாக மோடி தான் மீண்டும் பிரதமராக வேண்டும் என்பது எனக்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மக்களின் ஒருமித்த குரலாகும்.  

இவ்வாறு அவர் பேசினார்.  #AmitShah #LSElections2019

Tags:    

Similar News