செய்திகள்

இன்று டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் - ஜனாதிபதி, பிரதமர் மலரஞ்சலி

Published On 2019-04-14 04:56 GMT   |   Update On 2019-04-14 04:56 GMT
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த சிற்பி டாக்டர் அம்பேத்கரின் 128-வது பிறந்தநாளான இன்று ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் அவருக்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். #Ambedkarjayanti #DrBRAmbedkar
புதுடெல்லி:

இந்திய அரசியலமைப்பு சட்டம் என்னும் மகத்தான சாசனத்தை வடிவமைத்த மாபெரும் சிற்பியும், சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க பாடுபட்ட சமத்துவ நாயகருமான சட்டமேதை ‘பாரதரத்னா’ பாபா சாகேப் டாக்டர் அம்பேதகரின் 128-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் எழுச்சியுடனும் சிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது.

டெல்லியில் உள்ள பாராளுமன்ற புல்வெளியில் அண்ணல் அம்பேத்கரின் சிலையின் முன்னே வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்துக்கு ஜனாதிபதி ராம்நாத்  கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



இதேபோல், பல மாநிலங்களிலும் அரசியல் கட்சி தலைவர்களும் பொதுமக்களும் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

அவரது பிறந்தநாளையொட்டி ஜனாதிபதி ராம்நாத்  கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘நமது நாட்டின் தனிப்பெரும் அடையாளமாக திகழும் நமது அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சாதிகளற்ற, பாகுபாடுகளற்ற நவீன இந்தியாவை உருவாக்கவும், பெண்கள் மற்றும் நலிந்த மக்களுக்கான சம உரிமைகள் நிலைநாட்டப்படவும் தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர். அவரது பிறந்தநாளன்று எனது மரியாதையை செலுத்துகிறேன்’ என தெரிவித்துள்ளார். #Ambedkarjayanti  #DrBRAmbedkar
Tags:    

Similar News