செய்திகள்

உத்தர பிரதேசத்தை உத்தம பிரதேசமாக மாற்ற பாஜகவுக்கு மீண்டும் ஆதரவு கொடுங்கள் - மோடி பிரசாரம்

Published On 2019-03-28 07:50 GMT   |   Update On 2019-03-28 07:50 GMT
உத்தர பிரதேசத்தை உத்தம பிரதேசமாக மாற்றுவதற்கு பாஜகவுக்கு மீண்டும் ஆதரவு அளிக்கும்படி பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். #ModiCampaign #LokSabhaElections2019
மீரட்:

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரம் செய்தார். பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு வந்து உங்கள் அன்பையும் ஆசீர்வாதத்தையும் கேட்டேன். என் மீது மிகுந்த அன்பு செலுத்தி ஆதரித்தீர்கள். இந்த அன்பையும் ஆசீர்வாதத்தையும் திரும்ப தருவதாக கூறினேன். நான் செய்த பணிகள் தொடர்பான அறிக்கையை உங்கள் முன் வைப்பதாகவும் கூறினேன்.

உங்களின் ஆதரவினால் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டோம். நாங்கள் செய்த பணிகளை மக்களுக்கு தெரிவிக்கிறோம். முந்தைய ஆட்சியாளர்கள் செய்ததையும், செய்யாதவற்றையும் எடுத்துக் கூறுகிறோம். நாங்கள் வளர்ச்சிகான பாதையில் செல்கிறோம். ஆனால், மற்றவர்களிடம் அதற்கான கொள்கை எதுவும் இல்லை.

இதனை கணக்கில் கொண்டு, வரும் தேர்தலில் யாரை பிரதமராக தேர்வு செய்யவேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். மோடி அரசுதான் மீண்டும் வரப்போகிறது என மக்கள் நினைத்துவிட்டனர். இங்கு திரண்டிருக்கும் மக்களே அதற்கு சாட்சி.



இரண்டாவது முறை எங்களுக்கு ஆதரவு கொடுங்கள். உத்தர பிரதேசத்தை உத்தம பிரதேசமாக மாற்ற எங்களுக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார். #ModiCampaign #LokSabhaElections2019
Tags:    

Similar News