செய்திகள்

அசாமில் விஷ சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 157 ஆக உயர்வு

Published On 2019-02-25 18:42 GMT   |   Update On 2019-02-25 18:42 GMT
அசாம் மாநிலத்தில் விஷச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #HoochTragedy #AssamHoochTragedy
கவுகாத்தி:

அசாம் மாநிலம் கோலஹட் மாவட்டத்தில் ஹல்மிரா தேயிலை தோட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன் மது குடித்த நூற்றுக்கணக்கானவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் தொடர்ந்து ஏராளமானவர்கள் இறந்து வந்தனர்.



இந்தநிலையில் நேற்று வரை கோலஹட் மாவட்டத்தில் மட்டும் 99 பேரும், எல்லை பகுதியில் உள்ள ஜோர்ஹட் பகுதியில் 58 பேரும் பலியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அசாமில் விஷ சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை நேற்று 157 ஆக உயர்ந்தது. இதுதொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #HoochTragedy #AssamHoochTragedy


Tags:    

Similar News