செய்திகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வருகை

Published On 2019-02-20 16:25 GMT   |   Update On 2019-02-20 16:25 GMT
இந்தி பிரசார் சபா நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வருகிறார். #RamNathKovind
புதுடெல்லி:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இருநாள் பயணமாக தமிழகம் மற்றும் ஆந்திரப்பிரதேசத்துக்கு வருகை தரவுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் இந்தி பிரசார் சபா நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வருகிறார். இந்தி பிரசார் சபாவில் மகாத்மா காந்தி சிலையை நாளை குடியரசு தலைவர் ராம்நாத் திறந்து வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து, ஆந்திரப்பிரதேசம் மாநிலத்துக்கு செல்லும் ராம்நாத் கோவிந்த் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என ராஷ்ட்ரபதி பவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #RamNathKovind
Tags:    

Similar News