செய்திகள்

சிபிஐ முன்னாள் இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Published On 2019-01-31 11:31 GMT   |   Update On 2019-01-31 11:31 GMT
ராகேஷ் அஸ்தானாவை விமான போக்குவரத்து பாதுகாப்பு பிரிவு பொது இயக்குநராக நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு இன்று தள்ளுபடி செய்தது. #SC #RakeshAsthana
புதுடெல்லி:

சி.பி.ஐ. சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டு இருந்த ராகேஷ் அஸ்தானாவை விமான போக்குவரத்து பாதுகாப்பு பிரிவில்  பொது இயக்குநராக மத்திய அரசு ஜனவரி 18-ஆம் தேதி நியமித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு இன்று தள்ளுபடி செய்துள்ளது.

மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

முன்னதாக, ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய மறுத்த டெல்லி ஐகோர்ட், அவர் மீதான குற்றச்சாட்டுக்களை 10 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்கவேண்டும் என ஜனவரி 11-ஆம் தேதி உத்தரவிட்டது நினைவிருக்கலாம். #SC #RakeshAsthana
Tags:    

Similar News