செய்திகள்

33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்

Published On 2019-01-23 10:05 GMT   |   Update On 2019-01-23 10:05 GMT
சிவசேனா தலைவர் மறைந்த பால் தாக்கரேவின் பிறந்தநாளையொட்டி 33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் உருவாக்கப்பட்ட அவரது முகம் பலரையும் கவர்ந்துள்ளது. #Balasaheb #BalThackeray #ShivSena
மும்பை:

சிவசேனாவின் நிறுவனத் தலைவரான பால் தாக்கரே 23-1-1926 அன்று பிறந்து கடந்த 17-11-2012 அன்று காலமானார். இன்று அவரது பிறந்தநாளை அக்கட்சியினர் மிக எழுச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

மும்பையில் உள்ள மேயர் ஹவுஸ் இல்லத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என பால் தாக்கரேவின் மகனான உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர அரசை நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தார்.

அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில்  மேயர் ஹவுஸ் இல்லத்தின் சொத்து பத்திரங்களை மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று உத்தவ் தாக்கரேவிடம் ஒப்படைத்தார்.



இதற்கிடையில், மும்பையில் உள்ள சிவசேனா கட்சி தலைமையகத்தில் பிரபல ஓவியர் ஒருவர் சுமார் 33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் உருவாக்கப்பட்ட அவரது முகம் பலரையும் கவர்ந்துள்ளது. #Balasaheb #BalThackeray #ShivSena 
Tags:    

Similar News