செய்திகள்

நாடு முழுவதும் எட்டாம் வகுப்பு வரை இந்தி கட்டாயப் பாடமா? - மத்திய மந்திரி விளக்கம்

Published On 2019-01-10 07:34 GMT   |   Update On 2019-01-10 07:34 GMT
நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் எட்டாம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார். #PrakashJavadekar #Hindi #School
புதுடெல்லி:

நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் எட்டாம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக சமீபத்தில் சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பும் கிளம்பியது.



இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையின்படி எந்த மொழியையும் கட்டாயப் பாடமாக்குவதற்கு இடமில்லை. ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது என அவர் குறிப்பிட்டுள்ளார். #PrakashJavadekar #Hindi #School
Tags:    

Similar News