செய்திகள்

திருப்பதியில் பைக்-அரசு பஸ் மோதல்: என்ஜினீயரிங் மாணவர்கள் 3 பேர் பலி

Published On 2018-12-07 04:46 GMT   |   Update On 2018-12-07 04:46 GMT
திருப்பதி அருகே என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருமலை:

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் இப்புராஜபல்லியை சேர்ந்தவர் பிரவின் குமார் (23). திருப்பதி அடுத்த ரங்கம்பேட்டையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எம்.பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வந்தார்.

இவரது நண்பர்களான நெல்லூர் மாவட்டம் வெங்கடகிரி நரேஷ் (22), சித்தூர் மாவட்டம் பூதலப்பட்டு கார்த்திக் (22) ஆகியோர் நேற்று மாலை ரங்கம்பேட்டையில் இருந்து திருப்பதிக்கு ஒரே பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.

ஸ்ரீனிவாச மங்காபுரம் செட்டேபல்லி பைபாஸ் சாலையில் வந்த போது எதிரே பீலேரு நோக்கி சென்ற ஆந்திர அரசு பஸ் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

இதில் பிரவின்குமார், நரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்து குறித்து தகவல் அறிந்த சந்திரகிரி சப் - இன்ஸ்பெக்டர் ஈஸ்வரய்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கார்த்திக்கை மீட்டு திருப்பதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் வரும் வழியிலேயே கார்த்திக் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய அரசு பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.

என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News