செய்திகள்

அயோத்தியில் ராமர் கோவிலை கட்டாவிட்டால் மக்களின் நம்பிக்கையை பா.ஜ.க. இழக்கும் - பாபா ராம்தேவ் பேட்டி

Published On 2018-12-03 02:49 IST   |   Update On 2018-12-03 02:49:00 IST
மத்திய அரசு அவசர சட்டத்தை இயற்றி அயோத்தியில் ராமர் கோவிலை கட்டவில்லை என்றால் மக்களின் நம்பிக்கையை இழக்கும் என பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனரான பாபா ராம்தேவ் கூறியுள்ளார். #BabaRamdev #AyodhyaTemple #BJP
ஆமதாபாத்:

பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனரான பாபா ராம்தேவ் குஜராத் மாநிலத்தில் முதலாவது பதஞ்சலி அங்காடியை ஆமதாபாத்தில் நேற்று திறந்துவைத்தார். அதனை தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தாமாகவே கோவிலை கட்டிமுடிப்பது. மற்றொன்று ஜனநாயக ரீதியில் நாடாளுமன்றத்தில் இதற்கென தனி சட்டத்தை இயற்றி நிறைவேற்றி அரசு கோவிலை கட்டுவது.

ஒருவேளை மக்களே கோவிலை கட்டினால் அது கோர்ட்டு மற்றும் சட்டத்தை அவமதிப்பதாகும். ஆனால் கோர்ட்டில் இந்த வழக்கு ஏற்கனவே தாமதப்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே இந்த விவகாரத்துக்கு விரைவில் முடிவு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அவசர சட்டத்தை இயற்றி அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வேண்டும். அப்படி செய்யாத பட்சத்தில் பா.ஜ.க. மக்களின் நம்பிக்கையை இழக்கும்.  #BabaRamdev #AyodhyaTemple #BJP 
Tags:    

Similar News