செய்திகள்

ரபேல் ஒப்பந்தம், பண மதிப்பு நீக்கம் நாட்டின் மிகப் பெரிய ஊழல்கள்: ராகுல் காந்தி தாக்கு

Published On 2018-11-30 08:58 GMT   |   Update On 2018-11-30 08:58 GMT
ரபேல் ஒப்பந்தமும், பண மதிப்பு நீக்கமும் நாட்டின் மிகப் பெரிய ஊழல்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். #RahulGandhi #Demonetisation

புதுடெல்லி:

மத்திய அரசு செல்லாத நோட்டு அறிவிப்பு வெளியிட்ட போது தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் விருப்ப ஓய்வு பெற்றார்.

அவர் பண மதிப்பு நீக்கம் குறித்து கூறுகையில், “இந்த நடவடிக்கை மக்களுக்கு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு சரிவடைந்தது” என்றார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் தெரிவித்த கருத்து வருமாறு:-

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்காத அரவிந்த் சுப்பிரமணியன் ஏன் அப்போது பதவி விலகவில்லை.

ஆனால் முன்னாள் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் ரபேல் ஒப்பந்தத்தை எதிர்த்து ராஜினாமா செய்தார்.

 


ரபேல் ஒப்பந்தம் நாட்டுக்கு எதிரான மிகப் பெரிய குற்றம். மனோகர் பாரிக்கர் அதில் இருந்து விலகி தன்னை காப்பாற்றிக் கொண்டார்.

அரவிந்த் சுப்பிரமணியனும் இப்போது கருத்து தெரிவித்து அதில் இருந்து விடுவித்துக் கொண்டார்.

ரபேல் ஒப்பந்தமும், பண மதிப்பு நீக்கமும் நாட்டின் மிகப் பெரிய ஊழல்கள். இதுபற்றி விசாரண நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார். #RahulGandhi #Demonetisation

Tags:    

Similar News