செய்திகள்

ஒடிசாவில் ஆற்றுப்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

Published On 2018-11-20 15:45 GMT   |   Update On 2018-11-20 15:45 GMT
ஒடிசா மாநிலம், கட்டக் மாவட்டத்தில் இன்றிரவு ஆற்றுப்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். #Mahanadibridge #7deadinCuttack #Cuttackbusaccident #Odishabusaccident
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம், கட்டக் மாவட்டத்தில் சுமார் 30 பயணிகளுடன் சென்ற ஒரு பேருந்து இன்றிரவு  ஜகத்பூர் அருகே மஹாநதி ஆற்றுப்பாலத்தின் வழியாக வந்தபோது பாலத்தில் இருந்து தலைகுப்புற கவிழ்ந்து கீழே விழுந்தது.



இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்து பற்றிய தகவல் அறிந்து விரைந்துவந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். #7dead  #Mahanadibridge #7deadinCuttack #Cuttackbusaccident #Odishabusaccident
Tags:    

Similar News