செய்திகள்

மணிப்பூரில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Published On 2018-11-07 04:21 GMT   |   Update On 2018-11-07 04:21 GMT
மணிப்பூரில் இன்று 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக சண்டெல் உள்ளிட்ட பகுதிகளில் கட்டிடங்கள் அதிர்ந்தன. #ManipurEarthquake
இம்பால்:

நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் இந்திய மாநிலங்களில் மணிப்பூர் மாநிலமும் ஒன்று. மாநில தலைநகர் இம்பாலில் தொடர்ந்து லேசான நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், சாண்டெல் பகுதியில் இன்று அதிகாலை 4.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 4.1 அலகாக பதிவாகியிருந்தது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் லேசாக குலுங்கின. எனினும், பெரிய அளவில் பாதிப்போ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.



இதேபோல் சாண்டெல் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி 3.2 ரிக்டர் அளவிலும், அதன்பின்னர் 3.5 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இம்பாலில் ஜூன் 19-ம் தேதி 4.4 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் சுராசந்த்பூர் மாவட்டத்தில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. #ManipurEarthquake

Tags:    

Similar News