செய்திகள்
ஜம்மு காஷ்மீர் - பயங்கரவாதிகள் தாக்குதலில் மூத்த பாஜக தலைவர் உள்பட 2 பேர் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாஜக மாநில செயலாளர் மற்றும் அவரது சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியது. #MilitansAttack #BJPLeader
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் மாவட்டத்தில் பாஜக மாநில செயலாளராக இருந்தவர் அனில் பரிஹார். அவரது சகோதரர் அஜித்.
இருவரும் நேறு இரவு தங்களது கடையை மூடிவிட்டு வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் அருகில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அனில், அஜீத்தை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர்.
இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பாஜக மாநில செயலாளர் அனில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மாநில பொது செயலாளர் அசோக் கவுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் பல ஆண்டுக்கு பிறகு அரசியல் கட்சி பிரமுகரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. #MilitansAttack #BJPLeader