செய்திகள்

சோனியா, ராகுல், மன்மோகன் சிங்குடன் இலங்கை பிரதமர் சந்திப்பு

Published On 2018-10-19 09:40 GMT   |   Update On 2018-10-19 09:40 GMT
அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்தார். #Congress #RahulGandhi #RanilWickremesinghe
புதுடெல்லி:

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அரசுமுறை பயணமாக டெல்லி வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்து இருநாட்டு உறவுகளின் மேம்பாடு தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.



இதற்கிடையில், இன்று அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இலங்கை பிரதமரின் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #Congress #RahulGandhi  #RanilWickremesinghe

Tags:    

Similar News