செய்திகள்
கோப்புப்படம்

பெங்களூரில் ராகுல்காந்தி கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு

Published On 2018-10-12 10:23 GMT   |   Update On 2018-10-12 10:23 GMT
பெங்களூரில் எச்.ஏ.எல். தொழிலாளர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசவிருந்த கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அக்கூட்டத்தை வேறொரு இடத்திற்கு மாற்றி காங்கிரசார் ஏற்பாடு செய்துள்ளனர். #Congress #RahulGandhi
பெங்களூர்:

பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டி வருகிறார். பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு அந்த விமானத்தை தயாரிக்கும் ஒப்பந்தத்தை கொடுக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பி வருகிறார்.

இது தொடர்பாக நாளை (சனிக்கிழமை) அவர் பெங்களூரில் எச்.ஏ.எல். தொழிலாளர்கள் மத்தியில் பேச திட்டமிட்டு இருந்தார். ஆனால் எல்.ஏ.எல். நிறுவனம் கடைசி நிமிடத்தில் அதற்கு அனுமதி மறுத்து விட்டது. இதையடுத்து ராகுல்காந்தி பங்கேற்கும் கூட்டத்தை மின்ஸ்க் சதுக்கம் பகுதிக்கு மாற்றி காங்கிரசார் ஏற்பாடு செய்துள்ளனர். #Congress #RahulGandhi
Tags:    

Similar News