செய்திகள்

இடுக்கி, பாலக்காடு, திருச்சூர் மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது - பினராயி விஜயன்

Published On 2018-10-03 20:55 GMT   |   Update On 2018-10-03 20:55 GMT
கேரளாவில் இடுக்கி, பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRainfall #PinarayiVijayan
திருவனந்தபுரம்:

இலங்கை கடற்குதி அருகேயுள்ள அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க வேண்டாம் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், கேரளா மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் முதல் மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளதன் எதிரொலியாக கேரளாவின் இடுக்கி, பாலக்காடு மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு பேரிடர் மீட்பு குழுவினரை அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

தகுந்த காரணங்கள் இல்லாமல் பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம். சுற்றுலா பயணிகள் தங்கள் பயணங்களை தள்ளி வைக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். #KeralaFloods #KeralaRainfall #PinarayiVijayan
Tags:    

Similar News