செய்திகள்

அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு

Published On 2018-10-03 03:49 IST   |   Update On 2018-10-03 03:49:00 IST
லோக் ஆயுக்தா தொடர்பாக தன்னுடைய காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஒத்திவைத்தார். #AnnaHazare #HungerStrike
ரலேகான் சித்தி:

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே லோக்பால், லோக் ஆயுக்தாவை அமைக்க வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறார். லோக்பால், லோக் ஆயுக்தாவை அமைக்காவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என்று காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ந் தேதி அவர் அறிவித்தார்.

மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ந் தேதி மராட்டிய மாநிலம் ரலேகான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாக அன்னா ஹசாரே அறிவித்து இருந்தார். இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதியாக மராட்டிய மந்திரி கிரிஷ் மகாஜன், அன்னா ஹசாரேவை சந்தித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து விளக்கினார்.

இதையடுத்து நேற்று தொடங்க இருந்த தன்னுடைய காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை அன்னா ஹசாரே ஒத்திவைத்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இனியும் மத்திய அரசு தாமதம் செய்தால் காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ந் தேதி தேசிய அளவில் போராட்டம் நடத்துவேன்’ என்றார்.  #AnnaHazare #HungerStrike
Tags:    

Similar News