செய்திகள்

எல்லைப்பகுதியில் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ஹெலிகாப்டர் - காஷ்மீரில் பரபரப்பு

Published On 2018-09-30 09:14 GMT   |   Update On 2018-09-30 09:14 GMT
காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று பாகிஸ்தான் ஹெலிகாப்டர் அத்துமீறி ஊடுருவியதால் பரபரப்பு ஏற்பட்டது. #Pakistanihelicopter
ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்தியா - பாகிஸ்தான்  எல்லைக்கோட்டுப் பகுதியில் வழக்கம்போல் இன்று இந்திய பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இன்று பிற்பகல் பாகிஸ்தான் நாட்டின் வான் எல்லை வழியாக பறந்துவந்த அந்நாட்டின் ஹெலிகாப்டர் குல்பூர் செக்டர் அருகே இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவி சிறிது நேரம் வட்டமிட்டு பறந்தது.

இந்த காட்சியை எல்லையில் உள்ள இந்திய வீரர்கள் வீடியோவாக பதிவு செய்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவிய அந்த வெள்ளை நிற ஹெலிகாப்டர் அந்நாட்டின் விமானப்படைக்கு சொந்தமானதா?, அல்லது தனியார் ஹெலிகாப்டரா? என்ற முதல்கட்ட தகவல் ஏதும் வெளியாகவில்லை. #Pakistanihelicopter #Indianairspaceviolated
Tags:    

Similar News