செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 3 போலீசார் சடலமாக கண்டெடுப்பு

Published On 2018-09-21 04:31 GMT   |   Update On 2018-09-21 05:07 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் பயங்கரவாதிகளால் இன்று கடத்தப்பட்ட 3 போலீசார் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். #Kashmir
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் சிறப்பு படை பிரிவு போலீஸ் அதிகாரிகள், 3 பேர் மற்றும் ஒரு காவலர் இன்று திடீரென மாயமாகினர்.

காவல்துறையை சேர்ந்த 4 பேரையும் பயங்கரவாதிகள் கடத்திச் சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் அவர்களை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், அவர்களில் 3 போலீசார் அப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 
Tags:    

Similar News