செய்திகள்

அரசு எங்களுக்கு உதவ வேண்டும் - பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்ட வீரரின் மகன் உருக்கம்

Published On 2018-09-21 02:38 GMT   |   Update On 2018-09-21 02:38 GMT
பாகிஸ்தான் ராணுவத்தால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட எல்லைப் பாதுகாப்பு படை வீரர் நரேந்திர சிங்கின் மகன், அரசு தங்களது குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். #JammuKashmir #NarendraSingh
புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சர்வதேச எல்லையில் ராம்கார்க் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் நரேந்திர சிங்கை கழுத்தை அறுத்து கொலை செய்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த நரேந்திர சிங்கின் மகன் மோஹித் குமார் உருக்கமாக கூறியதாவது,



எனது தந்தையின் அர்பணிப்பு பெருமைபடக்கூடிய விஷயம். யாரும் இது போன்ற சம்பவங்களில் மாட்டிக்கொள்வதில்லை. நம்மால் பெருமை படாமல் இருக்க முடியாது. இன்று நாம் பெருமைப்படுவோம். நாளை யாராவது கொல்லப்படுவார்கள்? இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நானும் எனது அண்ணும் வேலை இல்லாதவர்களாக இருக்கிறோம். என் தந்தை நாட்டுக்காக உயிரை தியாகம் செய்துள்ளார். அரசு எங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். #JammuKashmir #NarendraSingh

Tags:    

Similar News