செய்திகள்

கரும்பு அதிகம் உற்பத்தி செய்வது சர்க்கரை நோயை ஏற்படுத்துகிறது - யோகி ஆதித்யநாத்

Published On 2018-09-12 11:18 GMT   |   Update On 2018-09-12 11:18 GMT
கரும்பு அதிகளவில் உற்பத்தி செய்வது ஒருவகையில் சர்க்கரை நோய்க்கு காரணமாக இருப்பதால், விவசாயிகள் வேறு பயிர்களில் கவனம் செலுத்த வேண்டும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். #YogiAdityanath
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் பாக்பட்டில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தற்போது நீங்கள் (விவசாயிகள்) அதிகளவில் கரும்பு உற்பத்தி செய்கின்றனர். கரும்பு ஒன்றை மட்டுமே பயிரிடும் விவசாயிகள் காய்கறிகள் போன்ற மாற்று பயிர்களில் கவனம் செலுத்த வேண்டும். அதிகளவிலான கரும்பு உற்பத்தி செய்யும் போது, அது அதிக கொள்முதலுக்கு வழிவகை செய்கிறது. சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு அதுவும் ஒரு காரணம்” என கூறினார்.

மேலும், கரும்பு விவசாயிகளுக்கும் நிலுவையில் உள்ள 10 ஆயிரம் கோடி விரைவில் வழங்கப்படும் எனவும் யோகி தனது பேச்சில் கூறினார். சமீபத்திலும், குரங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகள் அனுமன் மந்திரம் தினமும் கூறினால் குரங்கு தொல்லை இருக்காது என யோகி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News