செய்திகள்

அரியானாவில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்து - 6 பேர் பலி

Published On 2018-09-09 10:54 GMT   |   Update On 2018-09-09 10:54 GMT
அரியானா மாநிலத்தில் இன்று மாலை லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Haryana #Accident
சண்டிகர்:

அரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் உள்ள நெருஞ்சாலையில் இன்று மாலை லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து நடந்தது. இந்த விபத்தை நேரில் கண்டவர்கள் உடனடியாக காவல்துறைக்கும், ஆம்புலன்ஸ் வாகனத்துக்கும் தகவல் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்தும், இறந்தவர்களின் அடையாளம், முகவரி குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Haryana #Accident
Tags:    

Similar News