செய்திகள்

தெலுங்கானா சட்டசபையை கலைத்தார் ஆளுநர் - புதிய அரசு அமையும் வரை சந்திரசேகர ராவ் பதவியில் நீடிப்பார்

Published On 2018-09-06 09:57 GMT   |   Update On 2018-09-06 09:57 GMT
தெலுங்கானா சட்டசபையை கலைக்கும் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ஆளுநர், புதிய அரசு அமையும் வரை ஆட்சியை தொடரும்படி சந்திரசேகர ராவிடம் கேட்டுக்கொண்டார். #TelanganaAssembly
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அவரது ஆட்சி காலம் முடிய இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில், ஆட்சியை கலைத்து விட்டு முன்கூட்டியே சட்டசபை தேர்தலை சந்திக்க சந்திரசேகரராவ் முடிவு செய்தார்.



அதற்காக கடந்த சில தினங்களாக கட்சி நிர்வாகிகளிடம் தீவிர ஆலோசனை நடத்தி வந்த அவர், இன்று அமைச்சரவையை கூட்டினார். இதில் சட்டசபை கலைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஆளுநர் நரசிம்மனை சந்தித்த சந்திரசேகர ராவ், சட்டசபையை கலைப்பது தொடர்பான பரிந்துரை கடிதத்தை வழங்கினார். இந்த பரிந்துரையை ஆளுநர் நரசிம்மன் ஏற்றுக்கொண்டார்.

அதேசமயம், புதிய அரசு அமையும் வரை ஆட்சியை தொடருமாறு முதல்வர் சந்திரசேகராவிடம் கேட்டுக்கொண்டார். ஆளுநர் விடுத்த கோரிக்கையை சந்திரசேகர ராவ் ஏற்றுக்கொண்டார். #TelanganaAssembly
Tags:    

Similar News