செய்திகள்

மகாராஷ்டிராவில் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் பலி

Published On 2018-09-04 11:14 GMT   |   Update On 2018-09-04 11:14 GMT
மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் மாவட்டத்தில் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Accident #Maharashtra
மும்பை:

மகாராஷ்டிராவின் நந்துர்பார் எனும் பகுதியில் இருந்து நாஷிக் பகுதிக்கு பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து, எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. மிகவும் கோரமான இந்த விபத்தில் பேருந்தின் ஒரு பகுதி முழுவதும் தகர்த்து எறியப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், படுகாயம் அடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். #Accident #Maharashtra
Tags:    

Similar News