செய்திகள்

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவிகிதமாக ஆக உயர்வு

Published On 2018-08-31 14:31 GMT   |   Update On 2018-08-31 14:31 GMT
ஜி.டி.பி எனப்படும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 8.2 சதவிகிதம் என கணக்கிடப்பட்டுள்ளது. #GDP
புதுடெல்லி:

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2018-ம் ஆண்டின் முதல் காலாண்டில் 8.2 சதவிகிதமாக உள்ளது என அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 5.59 சதவிகிதம் மட்டுமே ஜிடிபி வளர்ச்சி இருந்தது. அதன்பின் 2017 இறுதி காலாண்டில் 7.7 சதவிகிதமாக உயர்ந்த ஜி.டி.பி தற்போது 8.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற 2014-ஆம் ஆண்டு முதல் கடந்த நான்காண்டுகளில் மிகவும் அதிகமான ஜி.டி.பி வளர்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. #GDP
Tags:    

Similar News