செய்திகள்
தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட முடியாது - உச்ச நீதிமன்றம்
தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. #NEET #NEETGraceMarks #CBSE
புதுடெல்லி:
இதனை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், கருணை மதிப்பெண் வழங்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கை தொடர்ந்து விசாரித்தது.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த ஆண்டு கலந்தாய்வு முடிந்துவிட்டதால் கருணை மதிப்பெண் விஷயத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறிய நீதிபதிகள், இனி இதுபோன்று நடைபெறாமல் இருக்க விசாரணை நடத்த தயார் என்று தெரிவித்தனர். #NEET #NEETGraceMarks #CBSE
நீட் தேர்வின்போது தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் பிழையாக இருந்ததால், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 கருணை மதிப்பெண்கள் வழங்கும்படி சிபிஎஸ்இ-க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த கருணை மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு மருத்துவக் கலந்தாய்வை நடத்தவும் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், கருணை மதிப்பெண் வழங்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கை தொடர்ந்து விசாரித்தது.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த ஆண்டு கலந்தாய்வு முடிந்துவிட்டதால் கருணை மதிப்பெண் விஷயத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறிய நீதிபதிகள், இனி இதுபோன்று நடைபெறாமல் இருக்க விசாரணை நடத்த தயார் என்று தெரிவித்தனர். #NEET #NEETGraceMarks #CBSE