செய்திகள்

பிரதமர் மோடியுடன் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் சந்திப்பு

Published On 2018-08-25 12:30 GMT   |   Update On 2018-08-25 12:30 GMT
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் இன்று சந்தித்து பேசினார். #PMModi #ChandrashekarRao
புதுடெல்லி:

தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் இன்று டெல்லி சென்றார். மாலையில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை 
சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது, மாநில விவகாரங்கள் தொடர்பான் மனு ஒன்றை பிரதமர் மோடியிடம் அளித்தார். ஏற்கனவே, இந்த மாத தொடக்கத்திலும் சந்திரசேகர் ராவ், பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.. #PMModi #ChandrashekarRao
Tags:    

Similar News