செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் வாஜ்பாய்க்கு 4 இடங்களில் நினைவிடம்

Published On 2018-08-18 05:23 GMT   |   Update On 2018-08-18 05:23 GMT
வாஜ்பாய்க்கு உத்தரபிரதேசத்தில் ஆக்ரா, கான்பூர், பல்ராம்பூர், லக்னோ ஆகிய 4 இடங்களில் நினைவிடம் கட்டப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. #Vajpayee #AtalBihariVajpayee
புதுடெல்லி:

முன்னாள் பிரதமரும் பா.ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இரவு எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார்.

டெல்லி கிருஷ்ணமேனன் மார்க்கில் உள்ள வீட்டில் இருந்து அவரது உடல் பொதுமக்கள், தலைவர்கள் அஞ்சலிக்குப்பின் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு யமுனை கரையில் உள்ள ஸ்மிருதி ஸ்தலத்தில் தகனம் செய்யப்பட்டது.

வாஜ்பாய் வீட்டில் இருந்து உடல் தகனம் நடந்த இடம் வரை 7 கி,மீ. தூரத்துக்கு பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மற்றும் மத்திய மந்திரிகள், முதல்- மந்திரிகள், தலைவர்கள் நடந்து சென்றனர்.

சரியாக 4.14 மணி அளவில் இறுதிச்சடங்கு தொடங்கியது. 5.05 மணிக்கு வளர்ப்பு மகள் நமிதா பட்டாச்சார்யா தீ மூட்டினார். முழு அரசு மரியாதையுடன் தகனம் நடைபெற்றது.


வாஜ்பாய்க்கு உத்தரபிரதேசத்தில் ஆக்ரா, கான்பூர், பல்ராம்பூர், லக்னோ ஆகிய 4 இடங்களில் நினைவிடம் கட்டப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும் உத்தரப்பிரதேசத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஓடும் புனித நதிகளில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்படுகிறது. ஆக்ராவில் யமுனையிலும், அலகாபாத், கான்பூர், வாரணாசி, கோரக்பூர், காக்ரா, பைசாபாத், அசம் கார், ஆகிய இடங்களில் கங்கையிலும், லக்னோ, அமேதியில் கோமதி ஆற்றிலும் கரைக்கப்படுகிறது.

ஆக்ராவில் பதேஸ்வர் என்ற இடம்தான் வாஜ்பாயின் பூர்வீகம். கான்பூரில் கல்விகற்றார். பலராம்பூர் அவர் முதன்முதலில் தேர்தலில் நின்றார். லக்னோவில் அவர் 5 முறை எம்.பி.யானார் என்பதால் இந்த 4 இடங்களில் நினைவிடம் அமைக்கப்படுகிறது.

இதேபோல் வாஜ்பாய் பிறந்த குவாலியரிலும் நினைவிடம் கட்டப்படும் என்று மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.  #Vajpayee #AtalBihariVajpayee
Tags:    

Similar News