செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் வெடி விபத்தில் சிக்கி ராணுவ வீரர் பலி

Published On 2018-08-13 01:33 IST   |   Update On 2018-08-13 04:00:00 IST
ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி ராணுவ வீரர் ஒருவர் பலியானார். #KashmirBlast
ஸ்ரீநகர்:

தெற்கு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தின் உரி பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அமைந்துள்ளது. அங்குள்ள ரஸ்டம் சோதனை சாவடியில் ராணுவ வீரர் ஒருவர் நேற்று மாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அப்பகுதியில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அதில் சிக்கிய ராணுவ வீரர் படுகாயம் அடைந்தார். சக வீரர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

குண்டு வெடிப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். #KashmirBlast
Tags:    

Similar News